Tuesday 21 May 2013

மண்ணை உணருதல்

கோடை முடிகிறது, பள்ளி திறக்கும், குழந்தைகள் தயங்கித்தயங்கி  வெட்ட கொண்டு செல்லப்படும் ஆடு  போல் மாலை போல் பேக் மாட்டிக்கொண்டு சீவி சிங்காரிச்சு இழுத்து செல்லப்படுவார்கள்.

உங்களில் கீழ்க்கண்டவர்கள் இருக்கிறீர்களா சில கேள்விகள் ..

1. எனக்கு மரங்கள்/ விலங்குகள் என்றால் ரொம்ப ஆர்வம் அதிக தடவை தடவை வாலன்டியர்  புரோகிராமில் கலந்து கொண்டு மரம் நாட்டிருக்கேன் எதிர்காலத்தில் விவசாயம் செய்யணும்கறது என் கனவு
2. என்னால் சமூக சேவையெல்லாம் செய்ய முடியாது நான் ஆபிஸ்ல அவுட் ரீச் பிரோக்ரம்ல அப்பப்ப பள்ளிகளுக்கு அனாதை ஆசிரமங்களுக்கு உதவ செல்வேன்
3. நான் உண்டு என் வேலை உண்டு அதை சரியா செய்வதே சமூகத்திற்கு நான் செய்யும் நன்மை.

எப்பவாது யோசிச்சீங்களா நீங்க எவ்வளவு படிச்சிருந்தாலும் கூலி வேலை தான் செய்யறீங்கண்ணு?
நீங்கள் காலையில் அடிச்சி புடிச்சு ஆபீஸ் போயி வேலைக்கு முன்னாடி மூஞ்சி கழுவரது தான் மொதல்ல செய்ரவேலை, ஏன்னா டிராபிக் புழுதி கசகசப்பு..வெய்யில்.

வெள்ளைக்காரன் ஒரு காலத்தில சொன்னாண்கிறதுக்காக மிசினாறி காண்வெண்ட்.கள் ஆரம்பித்து வைத்தது இது. இன்னும்   பிஞ்சு குழந்தைகளை  காலில் உறைய மாட்டி ரத்தத்தை உறைய வைக்கும் சூ மாட்டி அனுப்புறீங்களே இது சரியா? ஒரு தடவையாச்சும் பள்ளி கூடத்தில கேட்டீங்களா  ஏன் இப்படி 40 டிகிரி வெயிலில் இப்படி மாட்டி வரணும்னு ? ஏன் அவங்க டிராபிக்லா போகலையா அவங்களுக்கு ஏ சி ஸ்கூல்ஆ ? அவங்களுக்கு கச கசப்பு வராதா ? காலில் அரிக்காதா ? ஏன் பள்ளி கூடத்தில் எப்போதும் விளையாட்டு பீர்யடு மட்டும் தான் மொத்த நாளுக்குமா ? சூ மாட்டி தோம் தொம்நு குதிப்பாங்களா ? எல்லாருக்கும் மாட்டு தோலில்  சூ செய்யணும்னா எத்தனை மாடு வெட்ட பட்டிருக்கும்?



வெள்ளைக்காரனுக்கு அவன் ஊரில் பெரும்பாலும்  பனி மட்டும் தான் இருக்கும்; நமக்கு புத்தி எங்க போவூது ?
அவன் இந்த ஊருக்கு வந்தாண்ணா கவனிச்சிருக்கலாம் காட்டன் ஷர்ட்டும் டவுசரும் மாட்டிக்கிட்டு தான் சுத்துவான்.  நாம குழாய் மாட்டிக்கிட்டு சொறிஞ்சிக்கிட்டு இருப்போம் நல்ல வெயிலிலும்.



Saturday 11 May 2013

விவசாயம் பொய்த்து விட்டது

"நமக்கு தெரிந்ததெல்லாம் விவசாயம் பொய்த்து விட்டது நீரில்லாமல்" இது முழுக்க முழுக்க தவறு. முக்கியமான கவனிக்க மறுக்கிற பல விஷயங்கள் இருக்கின்றன.


சோழர்காலத்தில் இருந்து ஏரிகளும் குளங்களும் நிறையவே இருந்திருக்கின்றன நம் அலட்சிய மனோபாவம்; ஒருங்கிணைந்து செயல் படாமைதான் இந்த தற்போதைய நிலைமைக்கு நாம் காரணமாய் சொல்ல முடியும்.


தற்பொழுது அதற்கு அவசியம் ஏற்பட்டு இருக்கிறது அரசும் விழித்து கொண்டிருக்கிறது உலக வங்கி உதவியுடன் செயல் பட்டு வரும் நீர் ஆதாரம் காக்கும் மராமத்துபணிகள் சரியாக செய்யப்படவில்லை எனில் அதை உங்களால் உங்கள் பகுதியில் கண்காணிக்க முடியவில்லை  என்றால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறி வருவது ஐ டி படித்து அமெரிக்க மோகத்தில் திளைக்கும் அன்பர்கள் ஒட்டு போடாமைக்கு இணையானது (அவர்கள் போய் விட்டு வந்து இறங்கி செய்யும் அளப்பறை பற்றி பலர் எழுதியதையும் நினைவு கூர்வோம்)

என்ன செய்யலாம்.

1. பலர் தங்கள் பரிசோதனை முயற்சிகளை ஊடகத்தில் பதிவு செய்கிறார்கள் அதை முறைமை படுத்த வேண்டும்.  விவசாய பல்கலைகழங்களை நம்பி எந்த பலனும் இல்லை அதிலும் சரியான தகவல்களை பெறுவதை எளிதாக வேண்டும்.

2. நீர் குறைத்து / குறைந்து பெரும் காலத்தில் எந்த பயிர், தாவரம் எந்த மண் வளத்தில் எந்த நீர் அளவில் சரியாக வளரும் என்ற தகவல் பட்டியல் அதிகம் எல்லாருக்கும் சென்றதாக தெரியவில்லை. காரணிகளை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டோமானால் குழு முயற்சியால் அதை தகவமைக்கலாம்

3. அதே போல் அறுவடையான பயிர் பொருட்கள் நேரடியாக அந்த பகுதி குடும்பங்களுக்கு கிடைக்குமானால் (பெட்ரோல், இன்ன இதர செலவினங்கள் குறையும்,  கமிசன் என்ற பெயரில் சொரண்டும் ஊழல் வாய்ப்பு அடைபடும்)

4. இவை போன்று தகவமைக்கும் முறை ஏற்கனவே இருக்க கூடும் அவை நிறுவனங்களாக செயல்படும் விவசாய பண்ணையார்களுக்கே     அதிகம் உபயோகபடுமாறு இருக்கும் அதை மொழிபெயர்க்க ஒரு ப்ரோக்கர் வருவார் மீண்டும் எல்லாம் பழைய நிலைக்கே செல்லும். அவ்வாறு இல்லாமல் சாதாரண மனிதருக்கு புரியக்கூடிய   மொழி நடையிலும் கட்டுரை போன்று இல்லாமல் கணிமை முறையில் விவரங்கள் தரப்படுமானால் இவை இதன் பலனை பரந்த அளவில் கொடுக்கும்.

5. பிறகு தொடு திரை கணினி மூலம் இந்த தகவல்களை பெறுவதும் செலுத்துவதும் எளிது.

6. எல்லாருக்கும் அடிப்படை கணினி அறிவு பெற்ற குடும்பத்தினர் இருப்பார்கள் அவர்கள் முதலில் ஒரு சோசியல் ப்ரொபைல் முகவரி indiblogger போன்ற இடங்களில் பெறுவதும் சிலந்தி வலைப்பின்னல் போன்று தொடர்பு பெறுவதும் முதல் அடிப்படை செயல்.


 focus groups - என்று கீழ்கண்டவாறு உருவாக்கினால் நாம் அதை முன்னிலை படுத்த தொகுக்க உதவியாக இருக்கும்.


1. குறைந்த  நீர் செலவில் பயிர்கள் பற்றி விரிவாக தொகுக்க

2. வறட்சியான இடத்தில் விவசாயம் செய்ய மானாவாரி தாவரங்கள், மரங்கள்

3. காடு வளர்ப்பு, சமையலறை தோட்டம் (பிளாட் வாசிகள் கூட இப்போது கலக்குகிறார்கள்) (ஒன்றுமே செய்ய முடியாதவர்கள் கூட செய்ய கூடிய விஷயம்)

4. மாவட்ட அளவில் சில நோய் காரணிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் சரி செய்ய மூலிகைகள் வளர்ப்பு

5. கருவிகள் ஈடுபடுத்துதல்

6. அருகே நிலத்தை தரிசாய் போட்டு வைத்துள்ளவர்கள் வசம் தகவல்கள் கொண்டு சேர்த்தல் (ஏனெனில் உங்கள் அருகே மர வளம் இல்லாமல் தனியாக மழை பெறுதல் இயலாது )

 [கல்வி நிறுவனங்கள் அரசு கல்லூரிகள் கோவில்கள், இவைகளுக்கு அருகாமை நிலங்கள் வெட்டியாகவே இருக்கும் அதை அந்த அந்த பகுதி மக்கள் உபயோகிப்பவர் கொண்டு சிறு சிறு தோட்டங்களை அமைக்கலாம். அதில் வரும் பழங்கள் காய்கறிகள் அங்கேயே முயற்சியில் ஈடுபடும் அல்லது தொண்டுள்ளம் கொண்ட உபயோகிப்பவருக்கு கிடைக்குமாறு செய்யலாம்.]

7. விழிப்புணர்வு தகவல்கள் - எத்தனை பேருக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவிகித அரசு மானியம் கிடைக்கும் என்பது தெரியும். இதை எல்லாம் கேட்டு பெறுவதற்கு தயக்கம் இருக்கவே கூடாது. எல்லாம் நம் வரிப்பணம் தான். சிறு விவசாயிகளுக்கு இதை பெறுவதில் உள்ள சிரமங்களையும் இத்தகைய குழுக்கள் எளிதாக தீர்க்கலாம்  (http://www.aed.tn.gov.in/worldbank_aided_Agri_modernisation.html )

பயிர் பற்றி கணிமை முறையில் தகவமைக்க பல வழிகள் இருக்கிறது.

பத்மநாபன் கணேசன் என்ற தனி நபர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் - http://agricultureforeverybody.blogspot.com/


ICAAP  என்ற ஒரு முயற்சி இத்தகைய தகவல்களை தொகுத்து வருகிறது - http://www.advanceagriculturalpractice.in/w/index.php/Main_Page
--
எப்படி தொகுக்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்
http://mooligaivazam-kuppusamy.blogspot.in/  மூலிகை தாவரங்கள் பற்றிய தொகுப்பு.
மற்றும்   http://www.grannytherapy.com/tam/

எப்படி இருக்க கூடாது என்பதற்கு காசுக்கு வேலைபார்க்கும் அடிமைகள் இருக்கும் ஆங்கில பயொலாஜிகல் பெயர்கள் உள்ள தளம் http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_cropselect_ta.html

---
வேறு சில வேளாண் பற்றிய அறிமுகங்கள் :

காடு வளர்ப்பு பற்றிய அனுபவ அறிவு பெற்ற குழு - afforestt.com 100 sqft இடங்களில் கூட 3000% சதவிகித பலன்களை பெறக்கூடிய மரங்களை இயற்கை முறையில் வளர்த்து தருகிறார்கள்  (பின்புலம் ஜப்பான்,  டாக்டர் அகிரா மியவகி முறைமை)


நம்பகுதியில் போத்துமுறையில் மரங்களை உருவாக்கும் அர்ஜுனன்
http://www.chepparaivalaboomigreenworld.com/index.html

சமையலறை தோட்டம் போல் கண்டெய்னர் தோட்டம் http://pakagri.blogspot.in/2013/01/how-to-grow-your-food-container.html 
(மற்றும் ஏராளமான அப்டுடேட் தகவல்கள்)


சாப்ட்வேர் துறையில் இருந்து வேளாண்மைக்கு மாறியவர்கள் 

http://www.rameshwari.com/
http://techie2aggie.blogspot.in/ (
மற்றுமொரு அன்பரின் சவேரா பார்ம்ஸ் மிகவும் அப்டேடாக இருக்கிறது)
குரல் வழி தானியங்கி முறை விவசாய தகவல் பெறும் கருவி IIT ஒருங்கிணைப்பில் முன்னோட்டத்தில் இருக்கிறது http://asrmandi.wix.com/asrmandi

மரங்களை பற்றிய இன்றிமையாமை குறித்து ஒரு கட்டுரை 
http://solvanam.com/?p=24498


மீண்டும் தொடர்வோம் ...

Monday 25 March 2013

பண்ணை குட்டை அமைக்க போகிறார்களாம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=674247

இந்த  முட்டாக்களின் செயல்களை யாரும் கவனிப்பதே இல்லையா ?
நூறு நாள் திட்டம் என்று எல்லாரையும் யும் முடக்கி வீட்டில் அமுக்கி டாஸ்மாக் வழி சென்று விட்டது  சமூகம்.

ஏற்கனவே சாகுபடிக்கு நிலம் இல்லை இருக்கிற கோமண நிலத்திலும் பண்ணை குட்டை அமைக்க போகிறார்களாம்.

ஊர்க்குளங்கள் ஏரி கால்வாய் நீர் தேங்கும் இடங்களில் எல்லாம் சாக்கடை ஆக்கிவிட்டு இவர்களுக்கு வெட்கமாய் இல்லை ?
--
சோமங்கலம் சிவன் கோவில் சென்ற வழியில் ஒரு கிராம விவசாயியை பஸ் பயணத்தில்  சந்தித்தேன் எப்படி இருக்கிறது என்று தான் கேட்டேன் (அவ்ளவுதான் மனசு கெட்டது !)

களை கொத்து யாரும் 400 ரூபாய்க்கு குறைவாய் வருவதில்லையாம் அதும் சாப்பாடு டீ கண்டிப்பாய் வாங்கி கொடுக்க வேண்டுமாம் அதுவும் அலுவலகம் போல் ஆறு மணிக்கெல்லாம் போயி விடுகிறார்களாம். மொத்தம் 500 ரூபாய் ஆகிறது, இவர் வருமானம் அவ்வளவு இல்லையாம் புரோக்கர் போக கிடைப்பது மிகவும் கையை கடிக்கிறது என்றார்.

நேரடியாக சில இடங்களுக்கு  விற்கவேண்டியதுதானே என்றால் புன்னகைக்கிறார். வலியும் வேதனையும் பின்னால் தெரிந்தது.

வெயில் வேறு அதிகம் என்பதால் இந்த வேலைக்கு யாரும் எளிதாக வருவது  இல்லை, எல்லா ஏரி களிலும் தண்ணீர் இல்லை என்பதால் பக்கத்து நிலங்கள் பிளாட்கள் ஆக விற்கபடுகின்றன என்றார் அது மட்டும் இல்லாமல் தண்ணீர் வந்தாலும் இவர் நிலத்துக்கு வராதாம் வரும் கால்வாய் எல்லாம் லெ அவுட் க்கு போக வழிகளா மாற்ற படுகின்றன.

மல்லிகை தவிர ஏதும் கட்டுபடி ஆவதில்லை என்கிறார்.  இன்னும் கொஞ்ச நாட்களில் விற்று விட்டு போயிடுவேன் என்கிறார்.  விற்றால் நாலு மடங்கு வருமானம் வருமாம். ஊர் பஞ்சாயத்து போன்ற வகையாராக்களை கவனித்து கொண்டால் சிலவு குறையும் சி எம் டி எ என்றால் செலவு அதிகமாகிறது என்றார்.

கண்ணை வித்து சித்திரம் வாங்க முடியுமோ ? அந்த முக்கண்ணன் சிவன் தான் சொல்லணும் .

Wednesday 20 March 2013

விவசாயம் - அடிப்படை




1.        நிலம் அல்லது மண் தொட்டிகள் சேகரிப்பது (நிலம் வாங்குவது தனிபெரும்  வேலை)

a.        மண் பரிசோதனை (கார மண் / அமில மண்) செய்தல்
b.        தகுந்த பயிர் வகை சீதோஷண நிலை/பயனர்  கொண்டு முடிவெடுத்தல்
c.        விதை நாத்து மற்றும் போத்து முறைகள் 

2.        நீர் வசதி (தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தடி/ ஆற்று நீர் கிடைத்தாலும் தேக்கி ஸ்ப்ரிங்க்லெர்  போன்ற நீர்தெளிப்பான் வசதி செய்து கொள்ளுங்கள் )

3.        மூடாக்கு போட தழைகள் (வேர்ப்பகுதி ஈரப்பதம் தேக்கி வைத்தலுக்காக/ அதற்கான செடிகள் மரங்கள் வளர்த்தல் )


4.        மாட்டு சாணம் / மண்புழு உரம் / தழை மற்றும் பல்வேறு (மனித, விலங்கு) கழிவுகள் மக்கிய உரம் தயாரிக்க தொட்டி / மண்பாண்டம் / சமயலறை கழிவு நீரும் உரம் தான்.

5.        மண் மேடு தயாரித்தல், உரக்குழி,  பண்ணைகுட்டை (நீர் மேலாண்மை)

6.        இடர்பாடு சந்திக்கும் வழிமுறை – பூச்சி, மண் ஊக்கம், காற்று தடுப்பான் செடிகள், வெள்ள நீர் வழிந்தோடும் வழிகள், கூண்டு போன்ற இதர பொறி கருவிகள் (மகரந்த சேர்க்கை, இயற்கை சமன்பாடு)

வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு




இந்திய பாரம்பரிய நெல் வகைகள்

 மற்ற துறைகளில் இருந்து வேளாண்மைக்கு, குழு விவாதம்


swadeshitn.org - தமிழக சுதேசி இயக்கம்

http://www.tamilpaper.net/?p=525 விதைகள் தாவரங்கள் மற்றும் அது தொடர்பான இந்தியாவின் ஏமாளியான நிலை

விவசாயம் - தெரிந்து கொள்ளவேண்டிய தளங்கள்


பிரபலமில்லா தளங்கள் புத்தகங்கள் நபர்கள்
restore.org.in பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான பொருட்கள் விற்பனை குழு மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான தகவல்
 
- பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான குழுமம் மற்றும் விளம்பரங்கள், கட்டண சேவை
 
http://kaani.org பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான இயக்கம் மற்றும் தாளாண்மை பத்திரிக்கை
http://earth.org.in – நித்யா பார்ம் என்று தனி ஒருவரின் முழுமுதல் பரிசோதனை முயற்சி பாடங்கள் (சுயசார்பு, துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)
http://csm-fanaa.blogspot.com/  மாற்று விவசாயம் பரிசோதனை மற்றும் சுய சார்பு முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)

hindu.com/2010/01/31/stories/2010013158140200.htm - விவசாயமும் ஒரு அறிவியலே - முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)


http://www.efarm.in/ - சென்னையில் விவசாயம் தொடர்பான பயிற்சிவகுப்புகள், களப்பயிற்சி

விவசாயம் - ஆர்வலர்களுக்கு வணக்கம்



பாரதத்தின் ஆன்மா கிராமங்கள் - விவசாயம் அதை உணர்பவர்களுக்கு !

அன்பர்களே வணக்கம் 


நம் பாரத தேசத்தில் விவசாயம் என்பது கானல் நீராய் மாறி சோத்துக்கு கையேந்தும் நிலை வரப்போகிறது.
நம்மில் பலர் விவசாயம் என்பதை பற்றி ஆர்வம் இருப்பினும் எங்கு தொடங்குவது என்றே நினைப்பில் பல காலம் சென்று விடுவதை அறிவோம்; சான்றோர் வாக்குப்படி எதுவும் இளமையில் பயிலப்படவேண்டும். 

இளையர்கள் திருமணத்திற்கு முன் எதுவாகிலும் முயற்சி செய்துவிடவேண்டும் அதுவே எளிதானது.
இப்போது பரவலாக எல்லாரும் விவசாயம் பற்றியும் அதை எப்படி எல்லாம் செய்ய முடியும் என்பதையும் பல ஊடகங்களில் காண்கிறோம்.


இங்கு பகிர வேண்டிய தகவல்கள் எல்லாம் மற்ற துறை நண்பர்களுக்காகவே இதை நான் ஒரு நிபுணனாக செய்யவில்லை என்பதை மனதில் கொள்ளவும்; நானும் உங்கள் போல் ஒரு சக பயணி வாருங்கள் சேர்ந்து தேடுவோம்; தேடிக்கண்டடைவோம்.


சில முன் குறிப்புகள் :


1. முதலில் ஒன்றை தெளிவாய் கொள்ளுங்கள் நீங்கள் துறை மாற்றி வருவதானால் அதற்கு உரிய காலமும் உழைப்பும் நேர்மையான திடமனதும் தேவை.

2. நீங்கள் உள்ளே வரும் துறை தினமும் இயற்கையாகவே மாறிக்கொண்டே இருப்பது.

3. அந்த மாற்றங்களை புரிந்து அதை கற்க பொறுமை அவசியம் 

4. மற்ற எல்லா தொழிலை போன்று இதை கற்று உடனடியாக பலன் பார்க்க முடியாது (இயற்கை ஆசீர்வதித்தால் ஒழிய)

5. உங்கள் தற்போதைய தொழில் / வேலையை எக்காரணம் கொண்டும் விடாதீர்கள்; கூடுதல் உழைப்பை கொடுக்க தயாராகுங்கள் 

6. விவசாயம் என்பதை எந்த வடிவிலும் தொடங்கலாம் வீட்டு தோட்டம் , தோப்பு மற்றும் பண்ணை, பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு,  மதிப்பு கூட்டுதல் மற்றும் விலங்குகள் வளர்ப்பு.